ராமானுஜர் 1000 விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
          
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ சபாவின் செயலாளர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆயிரமாவது ஆண்டு விழா
வைஷ்ணவ மக்களுக்கு 108 வைணவ கோவில்களை அடையாளம் காட்டியவர் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இவரது ஆயிரமாவது ஆண்டு விழா வருகிற மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 10 நாட்களுக்கு முன்பே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகாரா (ராமானுஜர்) கோவிலில் திருவிழா தொடங்கிவிடும்.
இதில், கலந்து கொள்வதற்காக வரவிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்களுக்கு சாலை வசதி, வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் தமிழக அரசு இதுவரை செய்யவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கொடுத்த மனுவுக்கு எந்த பதிலும் வரவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
எனவே இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு விழாவை அரசு தானே நடத்தப்போகிறது? அப்படியானால் ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்காமல் ஏன் இழுத்து அடிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் மகாராஜன், ‘அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனைத்து துறைகளின் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, ஸ்ரீபெரும்புதூரில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை சுமூகமாக தமிழக அரசு நடத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories