ராமானுஜர் 1000 விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
          
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ சபாவின் செயலாளர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆயிரமாவது ஆண்டு விழா
வைஷ்ணவ மக்களுக்கு 108 வைணவ கோவில்களை அடையாளம் காட்டியவர் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இவரது ஆயிரமாவது ஆண்டு விழா வருகிற மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 10 நாட்களுக்கு முன்பே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகாரா (ராமானுஜர்) கோவிலில் திருவிழா தொடங்கிவிடும்.
இதில், கலந்து கொள்வதற்காக வரவிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்களுக்கு சாலை வசதி, வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் தமிழக அரசு இதுவரை செய்யவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கொடுத்த மனுவுக்கு எந்த பதிலும் வரவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
எனவே இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு விழாவை அரசு தானே நடத்தப்போகிறது? அப்படியானால் ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்காமல் ஏன் இழுத்து அடிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் மகாராஜன், ‘அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனைத்து துறைகளின் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, ஸ்ரீபெரும்புதூரில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை சுமூகமாக தமிழக அரசு நடத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories