மனித உரிமைளை மதிக்க , இந்திய ராணுவம் சிறப்பு கவனம் செலுத்துவோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதியாக நேற்று(2019 டிச.,31) பொறுப்பேற்று கொண்ட மனோஜ் முகுந்த், டில்லியில் உள்ள, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணுவ தளபதியாக எனது கடமையை செய்ய தைரியத்தையும், பலத்தையும் வழங்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.
அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து சூழ்நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிப்போம். மனித உரிமைளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம். இவ்வாறு மனோஜ் முகுந்த் கூறினார்.
Army Chief General Manoj Mukund Naravane: Our priority will be to be operationally prepared at all times. We will pay special attention to respect human rights pic.twitter.com/4buURA9Y23
— ANI (@ANI) January 1, 2020
Army Chief General Manoj Mukund Naravane: I pray to Waheguru ji to give me courage and strength to perform my duties as the chief of Army Staff. All three services are ready to defend the country. pic.twitter.com/S6HPyAL6Nx
— ANI (@ANI) January 1, 2020