விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு

   
கோவை: 
’டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 421 பள்ளிகளில் இருந்து,34 ஆயிரத்து 505 மாணவர்கள், 101 தேர்வு மையங்களில், எழுதுகின்றனர்.
இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 98 பள்ளிகளில் இருந்து, 8 ஆயிரம் மாணவர்கள், 38 மையங்களில், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்கு பிரத்யேகமாக, ஐந்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொருத்தவரை, தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் முடிவடைந்தன. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, இன்று (மார்ச் 16ம் தேதி) நடக்கிறது. வரும் 30ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன.
பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 31ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடப்பதால், பொதுத்தேர்வு மதிப்பீட்டு பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது, தேர்வு மையங்களில் இருந்து, நோடல் மையத்திற்கு வரும் விடைத்தாள்களை, தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணிகள் நடக்கின்றன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் கொண்ட குழு மேற்பார்வையில், வரும் 31ல், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
ஏப்., 1 – 12ம் தேதிக்குள், அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவை கல்வி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் மணி மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பொள்ளாச்சியில், நகராட்சி மேல் நிலைப்பள்ளியும், விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள்களை, எந்த மாவட்டத்திற்கு, அனுப்ப வேண்டுமென, வரும் 28ம் தேதி தான், அரசு தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.
’கோவை மாவட்டத்திற்கு வரும், விடைத்தாள்களின் எண்ணிக்கையை கொண்டு, மதிப்பிடல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
’இதேபோல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்த, கோவை கல்வி மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ நேருமகா வித்யாலயா பள்ளி, சுங்கம், நிர்மலா மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சியில், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியும், மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
’ஏப்., 3ம் தேதி முதல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த, அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.
ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories