200 ரூபாய் நோட்டு அச் சிட ரிசர்வ் வங்கி முடிவு

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய ரூ.500 ரூ.2,000 நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
என்றபோதிலும், முன்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அளவிற்கு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இன்னும் பணப் புழக்கத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. தவிர, கடந்த மாதம் 13–ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையை தவிர்ப்பதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. கடந்த மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடுவது குறித்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது. இந்த பரிந்துரை நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக புதிய ரூ.200 நோட்டு அச்சிடும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.200 நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு நாட்டில் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories