200 ரூபாய் நோட்டு அச் சிட ரிசர்வ் வங்கி முடிவு

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய ரூ.500 ரூ.2,000 நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
என்றபோதிலும், முன்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அளவிற்கு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இன்னும் பணப் புழக்கத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. தவிர, கடந்த மாதம் 13–ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையை தவிர்ப்பதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. கடந்த மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடுவது குறித்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது. இந்த பரிந்துரை நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக புதிய ரூ.200 நோட்டு அச்சிடும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.200 நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு நாட்டில் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories