December 6, 2025, 8:13 AM
23.8 C
Chennai

200 ரூபாய் நோட்டு அச் சிட ரிசர்வ் வங்கி முடிவு

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய ரூ.500 ரூ.2,000 நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
என்றபோதிலும், முன்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அளவிற்கு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இன்னும் பணப் புழக்கத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. தவிர, கடந்த மாதம் 13–ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையை தவிர்ப்பதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. கடந்த மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடுவது குறித்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது. இந்த பரிந்துரை நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக புதிய ரூ.200 நோட்டு அச்சிடும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.200 நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு நாட்டில் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories