இப்போதைய தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட நடிகர் அஜித். இவருடைய படத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் .
இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படம் என்றால் அது அமர்க்களம், இது தான் இவரின் 25வது படம் ஆகும் .இந்த படத்தின் மூலம் தான் அஜித் முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக பட்டைய கிளப்பினார் ,
இந்நிலையில் அஜித் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் பெற்று கொள்ளவில்லையாம். அது ஏனென்றால் இதே தயாரிப்பாளருக்கு அதற்கு முந்தைய படம் தோல்வி என்பதால், இந்த படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.