பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்; நாளை பஸ்கள் ஓடுமா?

TNSTC buses indefinite strike - 2026
பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்

சென்னை:

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென போக்குவரத்து தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்து பணியாளர்கள் ஏழு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தன. இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை இன்று பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,250 கோடி தர அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனையில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தாங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை எனவும், உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பண பலன்கள் ரூ.7,000 கோடிவரை தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவைத் தொகையாக ரூ.750 கோடி தரப்படுவது என்பது மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறித்த தகவல் பரவியதை அடுத்து, வேலூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தம் உடனே தொடங்கிவிட்டது. அரசுப் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்திவிட்டு, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், தஞ்சையில் தற்போதே 50 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள், பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் திருச்சியில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கிவிட்டது. அரசு டவுன் பஸ்கள் மதியத்துக்கு பிறகு ஓடவில்லை. புறநகர் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

இன்று நள்ளிரவே பஸ்கள் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பேருந்து நிறுத்த போராட்டத்தால் கடும் பாதிப்பை தமிழகம் சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது

கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க பணிமனை ஊழியர்களை கொண்டு அரசு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories