சென்னையில் தோனி; ‘பைக்’கில் பின் தொடர்ந்து ’தலை’க்காக ‘மாஸ்’ காட்டிய ரசிகர்கள்!

dhony in chennai - 2026

சென்னை: ஐபிஎல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணிக்காக களப் பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள். சென்னை அணி கேப்டன் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கிய போது, ரசிகர்கள் ஹோ வென்ற இரைச்சலுடன் உற்சாகக் குரல் எழுப்பி பலத்த வரவேற்பு அளித்தனர்.

இந்திய அணியின் மூத்த வீரரான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார். உலகக் கோப்பை தொடர் முடிந்த கையுடன் ராணுவத்தில் சேவை ஆற்றச் சென்று விட்டார்!

தற்போது, ஐபிஎஸ்., போட்டிகளின் 13வது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் சீஸனில் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் எம்.எஸ்.தோனி. இதற்காக வலைப் பயிற்சியில் ஈடுபட தோனி, நேற்று சென்னை வந்தார்.

தங்கும் விடுதியில் இருந்து மைதானத்துக்கு அணி வீரர்கள் வந்த போது, தோனி பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்து மைதானத்துக்கு வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள், சாலையில் பேரணி போல் பைக்குகளில் பின்தொடர்ந்து வந்தனர். அங்கங்கே சிக்னலுக்கு நின்றபோது, சாலையில் இறங்கி, கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சக வீரர்களுடன் தோனியும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அதற்காக அவர் வலைப்பகுதி பிட்ச்சுக்கு வந்தபோது, தோனி.. தோனி.. என ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். தோனி தன் வழக்கமான ஸ்டைலில் சிக்சர் அடித்த போது, ரசிகர்களின் உற்சாகம் மேலும் கரைபுரண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories