January 20, 2025, 5:11 PM
28.2 C
Chennai

தமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது!

file picture

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து தகவல் அளித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ். அவர் இன்று தெரிவித்ததாவது…

தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேர் தில்லி தப்ளிக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. தில்லி சென்று வந்தவர்களில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 679 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 5 பேர் தவிர மற்றவர்கள் உடல் நலத்துடன் உள்ளனர்.

தில்லி தப்ளிக் இ ஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 679 பேரில் 7 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  ஹாலிவுட்டுக்குச் செல்லும் யோகி பாபு!

தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் 156 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதித்தவர்கள் அதிகமுள்ள இடமாக சென்னை உள்ளது. இங்கு 156 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...