இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு

Published:

இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவைப்பு கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு சுமார் 7மணியளவில் நெல்லை வந்தது.இந்நிலையில் ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் போதே இன்ஜினில் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.அதனை ஓட்டுனர் சரி செய்து நெல்லைக்கு கொண்டுவந்தார்.நெல்லையிலிருந்து சுமார் 7.10.க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் இன்ஜின் மீண்டும் கோளாறு செய்யவே ரயிலை இயக்க முடியாமல் ஓட்டுனர் நிறுத்தி வைத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.அதனைத்தொடர்ந்து மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு சுமார் 1.20 மணி நேரம் தாமதமாக 8.26க்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.இதன் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img