April 28, 2025, 3:08 PM
32.9 C
Chennai

சென்னையில் இருந்து பைக்கில் சுரண்டைக்கு வந்த பெண்! கிராமமே சீல் வைப்பு!

girl retun by bike

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சென்னையிலிருந்து பைக்கில் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கிராமம் சீல் வைக்கப்பட்டு உச்சக்கட்ட கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உடல்நலம் சரியில்லாத தந்தையாரைப் பார்க்க சென்னையிலிருந்து பைக்கில் வந்துள்ளார் ராஜகோபாலபேரியைச் சேர்ந்த பெண். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிராமமே சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலப்பேரி நடுத் தெருவைச் சேர்ந்தவர் சிவனு பாண்டி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் தோட்ட வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிதாவின் தந்தை சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் உடல் நலம் சரியில்லாத தனது தந்தையைப் பார்ப்பதற்காக கவிதா குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து பைக்கில் ராஜகோபாலபேரிக்கு வந்துள்ளார்

கடந்த 13ஆம் தேதி வந்தவர், உடனடியாக சுரண்டைக்கு வந்து மருத்துவமனையில் தன் தந்தையைப் பார்த்து விட்டு சென்றிருக்கிறார். சென்னையில் இருந்து வந்ததால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

இந்நிலையில், அவருக்கு 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரியை எடுத்து அனுப்பி உள்ளனர். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் ராஜகோபாலபேரியில் முகாமிட்டு உடனடியாக கிராமத்தை சீல் வைத்து முடக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories