சென்னையில் இருந்து பைக்கில் சுரண்டைக்கு வந்த பெண்! கிராமமே சீல் வைப்பு!

girl retun by bike

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சென்னையிலிருந்து பைக்கில் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கிராமம் சீல் வைக்கப்பட்டு உச்சக்கட்ட கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உடல்நலம் சரியில்லாத தந்தையாரைப் பார்க்க சென்னையிலிருந்து பைக்கில் வந்துள்ளார் ராஜகோபாலபேரியைச் சேர்ந்த பெண். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிராமமே சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலப்பேரி நடுத் தெருவைச் சேர்ந்தவர் சிவனு பாண்டி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் தோட்ட வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிதாவின் தந்தை சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் உடல் நலம் சரியில்லாத தனது தந்தையைப் பார்ப்பதற்காக கவிதா குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து பைக்கில் ராஜகோபாலபேரிக்கு வந்துள்ளார்

கடந்த 13ஆம் தேதி வந்தவர், உடனடியாக சுரண்டைக்கு வந்து மருத்துவமனையில் தன் தந்தையைப் பார்த்து விட்டு சென்றிருக்கிறார். சென்னையில் இருந்து வந்ததால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரியை எடுத்து அனுப்பி உள்ளனர். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் ராஜகோபாலபேரியில் முகாமிட்டு உடனடியாக கிராமத்தை சீல் வைத்து முடக்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories