ஏடிஎம்.,களில் பணம் எடுக்க… ரொம்பவே தயங்குறாங்க..! ஏன் தெரியுமா?!

madurai atm sanitized
madurai atm sanitized

ஏடிஎம்களில் பணம் எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள் வங்கி வாடிக்கையாளர்கள்.! எல்லாம், கொரோனா கொடுத்த அச்ச உணர்வுதான் காரணமாம்!

மதுரை மட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் உள்ள ஏடிஏம்களிலும் மக்கள் பணம் எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்குக் காரணமாக, வங்கிகள் சார்பில் ஏடிஎம்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பொதுத்துறை வணிக வங்கிகளின் ஏடிஎம்.,களில் குறிப்பிட்ட அளவு இடைவெளியில், அடிக்கடி இந்த மையங்களை சுத்தம் செய்வது கிடையாது என்று புகார் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.

சில வங்கிகளின் ஏடிஎம்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செக்யூரிட்டி நபர்கள் இரவு நேர கொசுக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏடிஎம்.,அறையின் ஒருபகுதியில் ஓய்வு எடுக்கின்றனராம். அதற்காக அவர்கள் மட்டும் உள்பகுதியில் சுத்தம் செய்கின்றனர். இவை தவிர, வங்கி நிர்வாகம் பெரும்பாலும் ஏடிஏம்களின் அருகில் கிருமி நாசினி வைத்திருக்கிறார்களே தவிர, வாடிக்கையாளர்கள் வந்து பணத்தை எடுத்துச் சென்ற பின்னர் கிருமி நாசினி கொண்டு தெளித்து ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வதில்லை என்கிறார்கள்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இதனால், கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம்களில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும், பரவை, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் போன்ற பேரூராட்சிகளின் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஏடிஎம்களில் வாரம் மூன்று முறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இப்போது மக்களுக்கு விழிப்பு உணர்வு கூடியிருப்பதால், முகக் கவசம் அணிந்து வந்து, கையில் கர்சீப் அல்லது ஏதாவது துணியை வைத்துக் கொண்டு, அதை வைத்தே ஏடிஎம்., மையங்களின் கதவுகளைத் திறந்தும், கை விரல்களில் துணி போன்றவற்றை அழுத்தி வைத்துக் கொண்டு ஏடிஎம் மெஷின்களில் நம்பர் கீ., அழுத்துவதும் அடிக்கடி நாம் காணக்கூடிய காட்சியாகிவிட்டது.

இருப்பினும், மதுரை நகர்ப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில், மாநகராட்சி சார்பில் கிருமி நாசினியை அடிக்கடி தெளித்து, ஏடிஎம் மெஷின் கீ போர்டை துடைத்து சுத்தம் செய்துவைக்க வேண்டும் என்பதே, ஏடிஏம்களை பயன்படுத்துவோரின் கோரிக்கையாக உள்ளது.

madurai stand que in atm

மதுரை நகரில் மக்கள் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம், மதுரைநகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கடந்த மாதங்களில் குவிந்த கூட்டம் தான். மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், நகரில் உள்ள ஏடிஎம்களுக்கு, வாரம் மூன்று முறையாவது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • செய்திக்கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories