நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுத்தால் உடனடியாக உங்களுக்கு
தெரியப்படுத்துவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை செல்லும் முன்னர்,
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்தார்.
அப்போது அவர் கூறிதாவது: செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில்
ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.
அரசியல் தொடர்பாக பலரும் தன்னிடம் பேசி வருவதாகவும், தான் இன்னும் அதுகுறித்து
முடிவெடுக்கவில்லை.
நான் அரசியல் தொடர்பாக முடிவெடுத்தால் உடனடியாக உங்கள் கேள்விகளுக்கு பதில்
அறிவிப்பேன் என்றும் கூறினார்.




