கீழே நின்றிருந்த 3 பெண்கள்… உயரழுத்த மின்கம்பி மீது திடீரென ஒடிந்து விழுந்த மரம்!

Published:

tree cut eb wire
tree cut eb wire உயரழுத்த மின்சார வயர் மீது ஒடிந்து விழுந்த மரம்.

மதுரை: சோழவந்தான் பஸ் நிலைய அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் ஒடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூன்று பெண்கள் உயிர் தப்பினர்.

சோழவந்தான் முன்னாள் கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டுப்போன மரம் முறிந்து உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்ததில் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரே இரும்பு பெரிய மின் கம்பம் சாய்ந்தது

இதன் அருகில் இருந்த சிக்னல் இரும்பு கம்பம் முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த 3 பெண்கள் விழுவது சப்தம் கேட்டு ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இந்த ரோடு வழியாக பஸ் நிலையம்,ரயில் நிலையம்,சப் ரிஜிஸ்டர்ஆபீஸ்,அரசுஆஸ்பத்திரி, பேரூராட்சி அலுவலகம்,சந்தை மற்றும் கடைவீதி ஆகியவற்றுக்கு சோழவந்தான் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ரோடு!

மாலைப் பொழுதுக்கு பின்னால் இச்சம்பவம் நடந்தது. பெரிய அசம்பாவிதம் நடக்க இருந்தது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன்,போக்குவரத்து அலுவலர் பழனிமுத்துமின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனே வந்து உயர் அழுத்த மின்சார வயர் மீது ஒடிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!
tree cut eb wire
tree cut eb wire பெரிய இரும்பு மின் கம்பம் சாய்ந்து அருகிலிருந்த சிக்னல் இரும்பு கம்பம் ஒடிந்து கீழே விழுந்து இருப்பதை படத்தில் காணலாம்
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img