February 21, 2026, 11:29 PM
26.7 C
Chennai

ஊரடங்கு முடியும் வரை… மதுக்கடைகள் திறக்கப் படாது: TASMAC அறிவிப்பு!

madurai tasmac2
madurai tasmac2

ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என TASMAC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TASMAC டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்ட செய்திக்குறிப்பில்

சென்னை உயர்நீதிமன்றம் மே 8 இன்று உத்தரவிட்ட படி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் ஊரடங்கு உத்தரவு முடியும் காலம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது, எனவே மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் அனைவரும் டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைகளை அடுத்த உத்தரவு வரும் வரையில் மூடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

tasmac closed - 2026

அதேபோல் அனைத்து மாவட்ட மேலாளர்கள் அனைத்து கடைகளிலும் ஷட்டர்கள் சரியாக மூடப்பட்டு இருக்கிறதா சீல் வைக்கப்பட்டதா பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்று எந்தவிதமான திருட்டு சம்பவத்துக்கும் காரணம் இல்லாத வகையில் பாதுகாப்புடன் உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியில் மதுபானம் விற்கப்படுவதை விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எந்தவிதமான பிரச்சினைகளும் வரக்கூடாது என்ற வகையில் பாதுகாப்புடன் இருக்குமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது!

டாஸ்மாக் மதுபான விற்பனை முதல் நாளில் ரூ.172 கோடி என்றும், இரண்டாவது நாளில் ரூ.125 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின. எனவே இரு நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆன நிலையில், உயர் நீதிமன்றம் மது விற்பனைக்கு திடீர் தடை போட்டிருக்கிறது. இதை ஒட்டி டாஸ்மாக் நிறுவனமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாள் கூத்துக்காகத்தான் எத்தனை போலீஸார் தங்கள் மற்ற பணிகளை எல்லாம் விட்டுவிட்டு டாஸ்மாக் கடைகள் முன் வேலை செய்தார்கள் என்று சலிப்பான கருத்துகளும் வரத் தொடங்கின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories