December 7, 2025, 5:21 AM
24.5 C
Chennai

தாயின் கண்முன்னே பரிதாபம்… லாரி மோதி 2 வயது சிறுமி உயிரிழப்பு!

lorry accident child died

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 வயது சிறுமி பலி. நகர் காவல்துறையினர் விசாரணை.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்டது குலாலர் தெரு பகுதி. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலைக்கு செல்லும் பிரதான சாலையில் எட்டு மாதங்களாக பாலம் வேலை நடைபெறுவதால் கனரக வாகனங்கள் செங்கல் பணிக்கு செல்லும் வாகனங்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகில் உள்ள குடியிருப்பு வழியாக செல்கின்றன.

lorry accident child died

இந்நிலையில் குலாலர் தெரு பகுதியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வரும் பரமகுரு மகாலட்சுமி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் மோகனரிஷி என்ற 2 வயது குழந்தை இவர்களது வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த நிலையில் தண்ணீர் எடுக்கச் சென்ற தனது தாயின் கண் முன்னே செங்கல் சூளை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்க முற்பட்ட போது நீண்ட நேரமாக உடலை எடுக்கவிடாமல் காவல்துறையினரிடம் அருகில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

lorry accident child died

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்த குழந்தையின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories