மதுரையில் கொரோனா உயிரிழப்பு 19 ஆக உயர்வு!

madurai rajaji hospital
madurai rajaji hospital

மதுரையில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று இறந்தவர்களில் பெரும்பாலோர் அறுபது வயதைக் கடந்தவர்கள் என்றும் இவர்கள் சிறுநீரக் கோளாறு மற்றும் மூச்சுத் தினறலால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நேற்று வரை பத்து பேரும், இன்று மேலும் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மதுரை செல்லூரில் உள்ள மின்மயனத்தில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

இதனிடையே, மதுரை மாவட்டத்துக்கு 42 காய்ச்சல் பரிசோதனை வாகனங்களை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டதாவது… மதுரை களப்பணி அலுவலர் மருத்துவர் சந்திரமோகன், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் அரசு, அமைச்சர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அளிக்கின்ற தகவலின் பேரில், மருத்துவத்துறை வழிகாட்டுதலின்படி திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்திரவுகள் பிறபித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியம்.

மக்களும், மருத்துவத்துறை அறிவிக்கின்ற அறிவிப்புக்களை தவறாமல் கடைபிடித்தால் தான், இந்த நோயை, ஒழிக்க முடியும் என்றார். இனி, மதுரை மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories