ட்ரோன் மூலம் இயற்கை முறை கிருமி நாசினி தெளிப்பு!

dron

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிக அளவில் கொரோனா தாக்கம் உள்ள இடங்களில் ராட்சத எந்திரங்கள், தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி சென்னை திரு.வி.க. நகர் மண்டலப் பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் தெளிக்கப்பட்டு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று ராயபுரம் மண்டல பகுதிகளில் தெளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பரிசோதனைக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணை அமைப்பான ‘தக்‌ஷா’வும் துணை நிற்கின்றன. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானங்கள் மூலம் ‘தக்‌ஷா’ அமைப்பினர் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ‘தக்‌ஷா’ அமைப்பின் செயல் அதிகாரி என்.ராமநாதன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் 20 நானோ மைக்ரான் எடை அளவு கொண்டது என்று ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெரிவித்து உள்ளனர். எனவே, ஏ.சி. போடப்பட்ட அறைகளில் இது காற்றில் அப்படியே உலாவுவதால் எளிதில் மற்றவர்களுக்கு பரவுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் 4-வது மாடியில் இருக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இருந்தால், அவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிவரும் கிருமியானது 5 மணி நேரம் வரை காற்றில் நிற்கும் தன்மை கொண்டது.

ராட்சத எந்திரங்கள் மூலம் 600-க்கும் மேற்பட்ட மைக்ரான் எடை அளவில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதால் அவை உடனடியாக தரையில் விழுந்துவிடுவதால் காற்றில் பரவி நிற்கும் கொரோனா வைரசை அழிப்பது சிரமம்.

dron

அதே நேரத்தில் எங்களது ஆளில்லா விமானத்தின் ‘அல்ட்ரா லோ வால்யூம்’ மூலம் புகை போன்று 50 முதல் 80 மைக்ரான் அளவில் தெளிப்பதால் கிருமி நாசினியும் காற்றில் 3 மணி பறப்பதுடன் 10 முதல் 12 வினாடிகளில் கொரோனா வைரசை அழிக்கவும் முடியும். ‘அல்ட்ரா லோ வால்யூம்’ முறையானது அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ஆளில்லா விமானங்களில் மட்டுமே பயன்படுத்தும் முறையாகும்.

மேலும், இந்த கிருமிநாசினியானது, வீடுகளின் சமையல் அறையில் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகளின்மீது அறைக்கப்பட்ட ஆரஞ்சு விழுதுகளை பரப்பி 90 நாட்களுக்கு அதை பதப்படுத்தி மேலும் சில இயற்கை பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்டது ஆகும். எனவே, இந்த கிருமிநாசினி முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதால் மனிதர்கள் மீது பட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்துவது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories