அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை…! கூட்டத்தில் முடிவு!

madurai sugar industry
madurai sugar industry
  • அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும்
  • தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, நிர்வாக குழு த்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் செந்தில் குமாரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அலுவலக மேலாளர் பாலன் வரவேற்றார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இதில் ,தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 – 21 ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்க ஏற்பாடு செய்யப்படும். ஆலைக்கு ,கரும்பு அறுவடை செய்த 15 நாட்களில் கரும்பு கிரைய தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கரும்பு பதிவுக்கான பயிர்கடன் ஏக்கர் ஒன்றுக்கு 58 ஆயிரம் வீதம் வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரும்பு அறுவடை செய்வதற்கு தேவையான கூலி ஆட்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் ஆலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய நேரத்தில் கரும்பு அறுவடை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

கரும்பு மகசூல் அதிகப்படுத்த தரமான விதை கரும்புகள் வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் முழு மானியத்துடன் அமைக்க தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலை மூலம் வழங்கப்படுகிறது.

எனவே ,கரும்பு விவசாயிகள் அனைவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தங்களது நிலங்களில் கரும்புகளை பயிரிட்டு நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தங்களது பகுதியில் அமைந்துள்ள கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டுமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர், நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வக்கீல் பழனிச்சாமி, அப்பாஸ், நல்லமணி காந்தி, ராமச்சந்திரன், மொக்க மாயன் மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ,அலுவலக கணக்கர் சக்கரபாணி நன்றி கூறினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories