spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஅடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்: பயன் பெறுங்கள்!

அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்: பயன் பெறுங்கள்!

- Advertisement -
kadukkai

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.
கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.
பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்றவற்றை தீர்க்க கடுக்காய் பயன்படுகிறது.

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.

அறுசுவையில் ஒன்றான உப்பு தவிர்த்து இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய சுவைகள் இதில் அடங்கியிருப்பது சிறப்பு. இது வாத, பித்த, கபத் தன்மை மூன்றையும் சமநிலையில் வைத்து உடலில் உள்ள ஏழு வகை தாதுகளையும் பலப்படுத்துவதால் இது முக்கியமான காயகற்ப மருந்தாக திகழ்கிறது.

நாவறட்சி, தலைநோய், ஈரல் நோய், வயிற்றுவலி, தொழுநோய், மூச்சிரைப்பு, தொண்டைநோய், புண், கண்நோய், வாதம், வயிற்று வலி, காமாலை போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் கடுக்காய்க்கு உண்டு.

‘அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்ற சொல்வழக்கு இதன் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

கடுக்காயின் கடினமான தோல் பகுதியில்தான் மருத்துவ சக்தி இருக்கிறது. அதனால் கொட்டையை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும். பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சில முறை செய்தால் நல்ல பலன் கிட்டும். கண் நோய்களுக்காக தயாரிக்கப்படும் சில மருந்துகளில் கடுக்காய் சேர்க்கப்படுகிறது.

கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஆறாத புண்கள் மற்றும் தோல் நோய் இருக்கும் இடங்களில் கழுவினால் பலன் கிடைக்கும்.

200 மி.லி. தண்ணீரில் கடுக்காய் பொடி 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்கவைத்து தினமும் காலை, மாலை குடித்துவந்தால் உடல் எடை குறையும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.

100 கிராம் கடுக்காய் பொடியுடன், 50 கிராம் வீதம் சுக்கு, திப்பிலி தூள் கலந்து, ஒரு தேக்கரண்டி இந்துப்பு பொடியும் சேர்த்து, நன்றாக கலந்து பாட்டிலில் அடைத்துவைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் ஒரு தேக் கரண்டி எடுத்து காலையும், மாலையும் சாப்பிட்டுவரலாம். தேன் அல்லது சுடுநீர் கலந்து சாப்பிடவேண்டும். உணவுக்கு பின்பு இதனை சாப்பிடுங்கள். இதனை சாப்பிட்டு வந்தால் பசியின்மை, வயிற்று உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.

இரண்டு கடுக்காயை இடித்து, அத்துடன் 5 கிராம் கிராம்பு, 10 கிராம் லவங்கப்பட்டை சேர்த்து 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து அதிகாலையில் பருகவேண்டும். இரண்டு மூன்று முறை மலங்கழியும். இயற்கையான முறையில் வயிறு முழுமையாக சுத்தமாகும்.

கோடை காலத்தில் சிறிதளவு வெல்லத்தூளுடன், அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி கலந்து சாப்பிடலாம். தினமும் இரவு படுக்கச்செல்லும் முன்பு 5 கிராம் கடுக்காய்தூளை சூடான நீரில் கலந்து பருகலாம்.

இஞ்சி– சுக்கு– கடுக்காய் பொடியை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் முறையே காலை, மதியம், இரவு சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும். ஜீரணமும் நன்றாகும். மலமும் முழுமையாக வெளியேறும். இதனால் உடல் இயக்கம் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

கடுக்காய், புளித்தமோர், சுக்கு, இந்துப்பு, மிளகு, ஒமம் போன்றவைகளை கலந்து ‘பாவன கடுக்காய்’ என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றுப் புண், மூலம், ஈரல் நோய்கள், சைனஸ் தலைவலி, பசியின்மை போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

பிஞ்சு கடுக்காயுடன், விளக்கெண்ணெய் கலந்து மூலகுடார தைலம் என்பது தயாரிக்கப்படுகிறது. இது மூல நோய்களுக்கு மிக சிறந்த மருந்து. தினம் 10 மி.லி. வீதம் இரவு சாப்பிடவேண்டும். இது அனைத்து வகையான மூலம் மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து.

கடுக்காய் கலந்த மருந்துகள் சித்த மருந்து விற்பனை நிலையங்களிலும், கடுக்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் கடுக்காயை எந்த விதத்திலும் சாப்பிடக்கூடாது

கடுக்காய் உடலில் நன்கு பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
கடுக்காய் வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகிய இடங்களில் உள்ள ரணங்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.

உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்.

பொதுவாகவே சிலருக்கு மற்றவர்களை காட்டிலும் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு குறிப்பிட்ட வகையான உணவுகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால் மட்டுமே ஜீரணம் ஆகும்.

kadukkai podi

கடுக்காய் தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

கடுக்காய், கொட்டை பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி, அந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பற்கள், ஈறுகள் சம்பந்தமான அணைத்து பிரச்னைகளும் நீங்கும்.

ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிவது நின்ற பிறகு, அந்த காயத்தின் மீது கடுக்காய் பொடியை தூவுவதால் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ஏற்கனவே இருக்கும் புண்களின் மீதும் கடுக்காய் பொடியை தூவி வந்தால் புண்கள் சீக்கிரம் ஆறும்.

ஒரு சட்டியில் ஒரு கோப்பை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதில் மூன்று கடுக்காய்களை போட்டு, காய்கள் பிளந்து கொள்ளும் அளவிற்கு காய்ச்சி, பின்பு அந்த எண்ணையை ஒரு புட்டியில் போட்டு அடைத்து, அதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன், பொடுகு போன்ற தொல்லைகள் நீங்கும்.

சிலருக்கு பல வகையான உலோகங்களாலான நகைகளை அணிவதால் உடலில் அரிப்பு, புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கடுக்காயை எடுத்துக்கொண்டு அதை சந்தனகட்டையை தேய்க்கும் கல்லில் விட்டு சில துளிகள் நீர் விட்டு தேய்த்த பின்பு கிடைக்கும் பசையை எடுத்து, தோலில் புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேல்நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கடுக்காய் நீரிழிவு நோயாளிகளின் நோய் பாதிப்பின் தீவிர தன்மையை குறைப்பதில் பேருதவி புரிகிறது என கண்டறிந்துள்ளனர். நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.

மனநலம் நமது பண்டைய ஆயுர்வேத நூல்களிலேயே கடுக்காய் மனிதர்களின் மனநலத்தை மேம்படுத்துவதில் பேருதவி புரிகிறதுது என்பதை கண்டறிந்துள்ளனர். கடுக்காய் உடல் மற்றும் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய எதிர்மறை சக்திகளை அறவே நீக்கும் திறன் கொண்டது. கடுக்காயை மருந்தாக அவ்வப்போது சாப்பிட்டு வருபவர்களுக்கு மன நலம் சிறப்பாக இருக்கும்.

ரத்த சுத்தி கடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண், பெண் உறவுகளை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.

மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மலச்சிக்கல் மற்றும் ஜீரண சக்தி குறைபாடு உள்ளவர்கள் 3 கடுக்காய் தோலுடன் சிறிது இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அதை ஒரு துவையலாக செய்து கொள்ளவும்.பின் அதை சாதத்துடன் சேர்த்து உணவில் சேர்த்துக் கொள்வதால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் ஓடிவிடும்.

பித்தம் மற்றும் வாத நோய் உள்ளவர்கள் கடுக்காய் தூளுடன் சிறிது சுக்கு, திப்பிலி எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம் உணவில் சேர்த்துக் கொண்டால் அனைத்து நோய்களும் குணமாகும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறு உள்ளவர்கள் சிறிது கடுக்காய்தோலுடன் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.அந்த கொதித்த நீரை அதிகாலையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
வயதான தோற்றத்தில் அவதிப்படுபவர்கள் கடுக்காய்பொடியுடன் சிறிது தேன் கலந்து ஒரு ஆண்டு முழுவதும் காலையில் உண்ண வேண்டும்.

இது போல் நீங்கள் செய்வதால் உங்களுக்கு வந்துள்ள வயதான தோல் சுறுக்கம், முதுமைத் தன்மை மற்றும் நரை முடி போன்றவை அனைத்தும் குணமாகும்.

கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.

கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.

கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.

பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை – மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.

கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும். கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும்.

கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.

கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe