சொத்துவரியை உடனே செலுத்துங்க: நெருக்கடி தரும் சென்னை மாநகராட்சி!

chennai corporation office

சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என கொரோனா நெருக்கடி நிலையிலும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்களை வீடுகளுக்குள் முடக்கி உள்ளது அரசு. வைரஸ் பரவல் வேகம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப் பட்டாலும்கூட, ஊரடங்கு அமல் படுத்தப் பட்ட புதிதில், தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமல் படுத்தப் பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர்.

தொழிற்சாலைகள் முடங்கின. வர்த்தகம் பாதிக்கப் பட்டது. பள்ளி, கல்லூரிகள் முழுதும் முடங்கின. இதனால் அனைத்து தரப்பினரையும் வருமான ரீதியாக பாதிக்க வைத்தது இந்தக் கொரோனா கால முடக்கம்.

இதனைக் கருத்தில் கொண்டு சொத்து வரி கட்ட அரசு அவகாசம் அளித்தது. அதாவது 2020-21 ஆண்டிற்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதமே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் எழுந்த பாதிப்புகள் காரணமாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இவ்வாறு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு நெருக்கடி கொடுத்துள்ளது.

பொது முடக்கம் விரைவில் முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பில், இந்தக் கால அவகாசம் ஏற்புடையதாக இருந்தது. ஆனால், இப்போதும் நீட்டிக்கப் பட்டுள்ள இந்த பொது முடக்கத்தால், வருமானம் இன்றி பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் மேலும் கால அவகாசம் கொடுக்கப் பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும், கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம் என மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், வரி வசூல் செய்தால் மட்டுமே மாநகராட்சியால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories