December 6, 2025, 8:53 AM
23.8 C
Chennai

மனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar
abinav vidhya theerthar

ஒரு மூடன் தன் அழகை காண கண்ணாடியில் முகத்தை பார்த்தான். அவனது முகம் அதில் துல்லியமாக பிரதிபலித்தது.

தன் முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருப்பதாக அவன் உணர்ந்தான் அதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தான் கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்ப முகமானது திலகம் கூட இல்லாமல் பாழ் நெற்றியாக இருப்பதுதான் இதற்கு காரணம் என்று முடிவுக்கு வந்தான்

தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணத்தில் கண்ணாடியில் தோன்றிய முகத்திற்கு குங்குமம் வைத்தான் அப்படி குங்குமம் வைக்கும் போது அவன் தலை சிறிது அசைந்து அதனால் குங்குமம் வைத்த இடம் நெற்றியை விட்டு தள்ளிச் சென்றது.

abinav vidhya theerthar

உடனே பிரதி பிம்ப நெற்றியில் இருந்த குங்குமத்தை சரி செய்வதற்கு முயன்றான் மீண்டும் அவன் தோல்வியைத்தான் அடைந்தான் இப்படி அவன் மீண்டும் மீண்டும் செய்ய அவனுக்கு தோல்வியே கிடைத்தது. ஒவ்வொரு முறையும் அவனது முகத்தில் சரியான படி அந்த குங்குமம் அமையவில்லை.

தோல்வியடைந்த பிறகு பிரதி பிம்பத்தையே நேரடியாக அழகுபடுத்த முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது இப்பொழுது அவன் முகம் அழகாக இருப்பதை கண்டு மகிழ்ந்தான்.

கண்ணாடியில் தெரியும் தன் பிரதி பிம்பத்தைப் அழகை சீர்செய்வதற்கு தன் முகத்தை அவன் அலங்கரித்துக் கொள்ள வேண்டியிருந்தது அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் இறைவனைப் பூஜிக்க வேண்டும் நம் சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு இறைவனுக்கும் ஜீவனுக்கும், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும் என்ன சம்பந்தம் முறையே முகத்திற்கும் அது பிரதிபலிக்கும் பிம்பத்திற்கும் உள்ள சம்பந்தம்

abinav vidhya theerthar

மனம் ஜீவனின் ஒரு வேலைக்காரன் எஜமானனை சந்தோசப்படுத்துவதே ஒரு வேலைக்காரனின் கடமையாகும் மனம் தன் எஜமானனான ஜீவனை எப்படி சந்தோஷப்படுத்துகிறது அது நேரடியாக தனது பிரபுவான ஜீவனை திருப்திப்படுத்துவதில் ஈடுபட்டதேயானால் அந்த முயற்சிகள் யாவும் வீணாவது உறுதி அந்த மூடன் நேரடியாக பிம்பத்தை அழகு படுத்த முயல்வது போலாகும்.

இதற்கு மாறாக ஜீவனின் உண்மை நிலையான இறைவனை வழிபட்டால் தான் அதனுடைய எஜமானனான ஜீவன் சந்தோஷம் அடையும். இறைவனை நாம் திருப்தி அடைய செய்தோமேயானால் அழகு புகழ் செல்வம் மனதிருப்தி அமைதி நிம்மதி என யாவும் அருகில் இருக்கும் மனம் சதா சந்தோஷத்தில் திளைக்கும் மற்றவை அர்த்தமற்றவை ஆகும் நித்தியஸ்ரூபன் நித்தியமாய் நிலைத்து நிலையான திருப்தி நல்கும்.

இந்த உயர்ந்த கருத்தை ஆதி சங்கர பகவத்பாதாள் நரசிம்ம பகவானை மேல் இயற்றிய ஒரு சுலோகத்தில் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories