December 6, 2025, 7:59 AM
23.8 C
Chennai

பொதுச் செயலாளராக சசிகலா?: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி இன்றும் படையெடுப்பு!

panneerselvam tn - 2025

புது தில்லி:

குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தில்லி வந்திருந்தார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஓபிஎஸ் அணியினர் இன்று தேர்தல் ஆணையத்துக்குச் சென்று இரட்டை இலைச் சின்னம் மீட்பு குறித்த தங்களின் மனு குறித்து விசாரித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, அதிமுக., பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்னும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக., நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் நியமனம் செல்லாது என அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுக., பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றும், உட்கட்சிப் பிரச்னை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் பொதுச் செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று தில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணயத்திடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியபோது, “தினகரன் துணை பொதுச் செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம்” என கூறினார்.

இத்தகைய நிலையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்க இரு அணிகளும் தயாராகி வருவதாகவே கூறப்படுகிறது. இதன் பின்னணியில் மத்திய பாஜக., தலைமையின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைப்பு சாத்தியமானால், அது தினகரன், சசிகலா குடும்பம் பங்கேற்பில்லாத அதிமுக., என்ற நிலையில்தான் இருக்கக் கூடும். எனவே அது சாத்தியமாகாது என்ற கருத்தை தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அணிகள் இணைப்பு நடக்காவிட்டாலும் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் ராஜினாமா செய்யக் கூடிய முடிவை எடுக்க வைக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து காலம் கடந்துவிட்டபடியால், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கோருவது என்ற அரசியல் நகர்வுக்கு மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். இந்த ஆட்சி தானாகவே கலைந்துவிடும் என்ற கருத்தைக் கூறி வந்தவர், தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அடிபோடுகிறார். எனவே தமிழக அரசின் நிலைத்தன்மை குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுப்பப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories