கோயில் கட்டி கொண்ட தாலி.. வாசலிலே தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

Screenshot_2020_0807_182016

கோயிலுக்கு உள்ளே தாலியை கட்டி கொண்டு, வெளியே வந்து தூக்கு போட்டு தொங்கிவிட்டது ஒரு ஜோடி.. தற்கொலைக்கு முன்பு நாவற்பழமும், மரவள்ளிக்கிழங்கையும் சாப்பிட்டு, மிச்சமிருந்ததை கோயில் வாசலிலேயே வைத்துவிட்டு இறந்துள்ளனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி காட்டுக்கொட்டாய் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் கவிதா. 20 வயதாகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சென்னிமலை அரசு காலேஜில் 3-ம் வருஷம் படித்து வந்தார். இவர் பாஸ்குமார் என்பவரை காதலித்தார். இருவரும் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டனர்.

ஆனால் 2 பேரும் வேறு வேறு பிரிவை சேர்ந்தவர்கள். எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தனர். அதையும் மீறி கல்யாணம் செய்ய நினைத்தபோதுதான், லாக்டவுன் வந்துவிட்டது. இதனால் ஒருத்தருக்கொருத்தர் சந்தித்து கொள்ளவும் முடியவில்லை. நேரில் சென்று பார்க்கவும் பஸ், ரயில் எதுவுமே இல்லை. அதனால் செல்போனில் மட்டுமே பேசி வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் 2 பேருக்குமே ஏக்கம் வந்துவிட்டது. எப்படியாவது பார்த்தே தீருவது என முடிவு செய்தனர். அதனால், பாஸ் குமார் நேற்று முன்தினம், வேலைக்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, கவிதா ஊருக்கு வந்தார்.. அங்கு தயாராக காத்திருந்த கவிதாவை பைக்கில் உட்கார வைத்து கொண்டு, ஈரியூர் காட்டுப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்றார்.

அம்மன் கோயிலில் பாஸ் குமார் கவிதாவுக்கு தாலி கட்டினார். பிறகு 2 பேரும் கோயிலை விட்டு வெளியே வந்தனர். எப்படியும் வீட்டுக்கு போனால், யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், அதனால் 2 பேரும் இறந்து போயிடலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி, கையில் வைத்திருந்த பணத்தில் நாவல்பழமும், மரவள்ளிக் கிழங்கும் சாப்பிட்டனர். அதில் மிச்சமிருந்ததை கோயில் படிக்கட்டில் வைத்துவிட்டனர். கையில் இருந்த சில்லறை பணத்தையும் அங்கேயே வைத்துவிட்டனர்.மறுபடியும் கோயிலுக்குள் சென்றனர். சிலைகளுக்கு சுற்றப்பட்டிருந்த துணிகளை எடுத்து வந்து, முடிச்சு போட்டு, அதே கோயிலுக்கு எதிரே இருந்த ஒரு கொட்டகையில் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்குப்போட்டு தொங்கி விட்டனர்.

நேற்று காலையில்தான் இவர்களது சடலத்தை அந்த பகுதி மக்கள் பார்த்து அலறினர். பிறகு போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து 2 சடலங்களையும் மீட்டனர். மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. 2 குடும்பத்தினரும் சடலங்களை கண்டு கதறியது காண்போரை கலங்க வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories