டாஸ்மாக் வேண்டும் குடிமகன்கள் கோஷம்

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர் நீண்ட நாட்களாக
அரசு மதுக்கடை இயங்கி வந்தது. அக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி அந்தந்த பகுதி
மக்கள் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த கடைகள் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட பாவூர்சத்திரம் கடையை நெல்லை – தென்காசி தேசிய
நெடுஞ்சாலை கே.டி.சி நகரில் இருந்து சின்னதம்பிநாடார்பட்டி செல்லும் வழியில்
தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 11
மணியளவில் மதுபானங்களை லாரியில் கொண்டு வந்து இறக்கினர். நேற்று பகல் 12
மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரணி, கேடிசிநகர், சின்னதம்பிநாடார்பட்டி
ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடையை
திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

இதையறிந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம்
பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அது வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது
என்று கூறியதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 100க்கும் மேற்பட்ட குடிமகன்கள்
கடையை திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் இரு
தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் இருதரப்பினரையும்
சமாதானம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories