டாஸ்மாக் வேண்டும் குடிமகன்கள் கோஷம்

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர் நீண்ட நாட்களாக
அரசு மதுக்கடை இயங்கி வந்தது. அக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி அந்தந்த பகுதி
மக்கள் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த கடைகள் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட பாவூர்சத்திரம் கடையை நெல்லை – தென்காசி தேசிய
நெடுஞ்சாலை கே.டி.சி நகரில் இருந்து சின்னதம்பிநாடார்பட்டி செல்லும் வழியில்
தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 11
மணியளவில் மதுபானங்களை லாரியில் கொண்டு வந்து இறக்கினர். நேற்று பகல் 12
மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரணி, கேடிசிநகர், சின்னதம்பிநாடார்பட்டி
ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடையை
திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

இதையறிந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம்
பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அது வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது
என்று கூறியதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 100க்கும் மேற்பட்ட குடிமகன்கள்
கடையை திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் இரு
தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் இருதரப்பினரையும்
சமாதானம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories