டாஸ்மாக் வேண்டும் குடிமகன்கள் கோஷம்

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர் நீண்ட நாட்களாக
அரசு மதுக்கடை இயங்கி வந்தது. அக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி அந்தந்த பகுதி
மக்கள் தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த கடைகள் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட பாவூர்சத்திரம் கடையை நெல்லை – தென்காசி தேசிய
நெடுஞ்சாலை கே.டி.சி நகரில் இருந்து சின்னதம்பிநாடார்பட்டி செல்லும் வழியில்
தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 11
மணியளவில் மதுபானங்களை லாரியில் கொண்டு வந்து இறக்கினர். நேற்று பகல் 12
மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரணி, கேடிசிநகர், சின்னதம்பிநாடார்பட்டி
ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடையை
திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

இதையறிந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம்
பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அது வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது
என்று கூறியதையடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 100க்கும் மேற்பட்ட குடிமகன்கள்
கடையை திறக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் இரு
தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் இருதரப்பினரையும்
சமாதானம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories