December 5, 2025, 11:44 PM
26.6 C
Chennai

நாளை முதல்… விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் அரசாணை வெளியீடு!

tn-epass
tn-epass

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்வதற்காக ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்குவது நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோருக்கு ஏற்கெனவே உள்ள இ பாஸ் நடைமுறையே தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் அல்லது ரேஷன் கார்டு விவரம் அளிக்கும் அனைவருக்கும், எந்த தாமதமும் இன்றி, இ – பாஸ் வழங்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். இந்நடைமுறை ஆக.17 திங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, கொரோனா ஊரடங்கு காரணமாக  இ – பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, அவசர மருத்துவ தேவை போன்றவற்றுக்கு செல்ல விரும்புவோருக்கு மட்டும் இ – பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் வெளியூர் செல்ல விரும்புவோர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இத்தகைய கெடுபிடிகளால், போலி இ – பாஸ் அச்சடித்து விற்பனை செய்யப்பட்ட முறைகேடுகளும் அரங்கேறின.  அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இ – பாஸ் பெறும்  முறைகேடுகளும் அதிகரித்தன. எனவே இ – பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என்று, பொது மக்கள்  வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இனி இ – பாஸ் வழங்க உத்தரவிடப் பட்டது.  இதன்படி, அனைவரும் கட்டாயம் இபாஸ் வைத்திருக்க வேண்டும் என்றும், இபாஸ் பெற்றுக் கொண்டுதான் அடுத்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், இபாஸ் இல்லாமல் வந்தால் நிச்சயம் மாவட்ட எல்லைகளில் போலீஸார் திருப்பி அனுப்புவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories