December 5, 2025, 11:32 PM
26.6 C
Chennai

விபத்தில் இறந்த பேரன் உயிருடன் வந்ததால் பாட்டி மரணம்!

Screenshot_2020_0817_161648

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ளது ஏர்வாய் பட்டினம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயதுள்ள சத்யராஜ், இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.

சத்யராஜ் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறை தினத்தை சந்தோஷமாக கழிப்பதற்காக தனது நண்பர் இளையபெருமாள் என்பவருடன் டூவீலரில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையம் நோக்கி திரும்பிபைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளையபெருமாள் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரிழந்த சத்யராஜ் உடலை அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சக்தி என்பவர் (எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருபவர்) நேற்று முன்தினம் தனது நண்பர் சின்னையன் என்பவருடன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சாலை விபத்தில் சத்தியராஜ் இறந்ததை பைக்கில் வேலைக்கு சென்ற சக்தி தான் இறந்து போனார் என்ற தகவலை சக்தியின் பெற்றோர் உறவினர்கள் மத்தியில் யாரோ தவறுதலாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் மகன் சக்திக்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என தகவல் கூறியுள்ளது. இதனால் உயிரிழந்தது தங்கள் மகன்தான் என முடிவு செய்த சக்தியின் பெற்றோர் தீர விசாரிக்காமல் வீட்டுக்கு முன்பாக பந்தல் போடப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் தகவல் கூறி அழைத்து வரச்செய்து மருத்துவமனையில் இருந்து சக்தி உடலை வாங்குவதற்கு தயாராக காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் சக்தியுடன் பைக்கில் சென்ற சின்னையன் சக்தியின் பெற்றோருக்கு போன் செய்து சக்தி தன்னுடன் தான் இருக்கிறார். நாங்கள் வேலை முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் சக்தியும் சின்னையனும் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களை நேரில் கண்ட சக்தியின் பாட்டி 80 வயது மீனாட்சி ஆனந்த அதிர்ச்சியில் இறந்து போனார். உயிரோடு எல்லாம் இருப்பவரை விபத்தில் இறந்ததாக யாரோ சிலர் தவறான தகவலை பரவச் செய்துள்ளனர்.

நான் சாகவில்லை இதோ உயிரோடு இருக்கிறேன் என்று நேரில் வந்தவரை பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் அவரது பாட்டி இறந்து போனதால் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories