51வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜவகல் ஸ்ரீநாத்!

srinath
srinath

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத் இன்று தமது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிடித்த பதிவுகளின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

மைசூர் எக்ஸ்பிரஸ் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப் படும் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு மைசூர் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மலர்க்கொத்து கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினர்.

இப்போது இந்திய அணியில் பல வேகப் பந்து வீச்சாளர்கள் உருவாகிவிட்டனர். ஆனால், 1990களில் இந்திய அணியில் ஒரே ஒரு வேகப் பந்து வீச்சாளரே இருந்தார். அவர் ஸ்ரீநாத். அன்றைய கால கட்டத்தில் 92 உலகக் கோப்பையுடன் சீனியர் தலைகள் சென்றுவிட, அடுத்த கட்டமாக இந்திய அணிக்கு பெரும் பலமாக விளங்கிய இளையவராகத் திகழ்ந்தவர் ஜவகல் ஸ்ரீநாத். ஒல்லியான தேகம், துருதுரு பார்வை, வேகமான பந்து வீச்சு, இளமையான தோற்றம் எல்லாம் ஸ்ரீநாத்துக்கு ஓர் இடத்தைக் கொடுத்திருந்தது.

ஜஸ்பிரீத் பும்ரா , இஷாந்த் சர்மா , முகமது ஷமி , உமேஷ் யாதவ் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி இன்று துடிப்பான வேகப்பந்து வீச்சைக் கொண்டுள்ளது . ஆனால், இந்திய அணி பாரம்பரியமாக எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கவில்லை! பெரும்பாலும் நடுத்தர வேகப் பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களையே கொண்டிருந்தது. அந்த நேரத்தில், 90 களின் தொடக்கத்தில் கபில்தேவ் தொடங்குவது போன்ற ஆக்ரோஷத்தை போட்டிகளில் புகுத்தி அறிமுகம் செய்தவர் ஸ்ரீநாத்.

கபில் தேவ் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றாலும் அவர் ஒரு ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சாளராகவே இருந்தார். கபில் தேவ் ஓய்வு பெற்ற பின்னர் 1990 களில் நாட்டின் வேகப்பந்து வீச்சுத் துறையின் சுமையை சுமந்த இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஜவகல் ஸ்ரீநாத்!

மைசூரைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர்! 1989 ல் செகந்திராபாத்தில் தனது முதல் தர போட்டியின் அறிமுகத்திலேயே ஹாட்ரிக் எடுத்தார். அவருக்கு இன்று 51 வயது! ​​

அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்தாவது அதிகட்பட்ச விக்கெட் எடுத்துள்ள பேஸர்!

அக்டோபர், 1991 முதல் மார்ச் 2003 வரை நீடித்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர்களிடையே ஐந்தாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீநாத்! க்ளென் மெக்ராத் (699 விக்கெட்), வக்கார் யூனிஸ் (671), வாசிம் அக்ரம் (640) ஆலன் டொனால்ட் (602) இந்த கால கட்டத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.

200 டெஸ்ட் விக்கெட்டுகளின் மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் (கபில் தேவிற்குப் பிறகு) ஸ்ரீநாத். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தின் தொடக்க டெஸ்டில் ப்ளூம்பொன்டைனில் அவர் இந்த சாதனையை அடைந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன், டிம் சௌதி, பாப் வில்லிஸ், கர்ட்னி வால்ஷ், மோர்ன் மோர்கல், பீட்டர் ஸ்டில், ஸ்டூவர்ட் பிராட் போன்றவர்களை விட அவர் 54 டெஸ்ட் போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டினார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய 13 பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்ரீநாத். இந்த சாதனையை நிகழ்த்திய இன்னொரு இந்தியர் அனில் கும்ப்ளே.

https://twitter.com/search?q=%23javagalsrinath&src=trend_click&vertical=trends

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories