முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் மகன் விபத்தில் பலி

Published:

sivakami-ias
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி. (சமூக சமத்துவப் படை நிறுவுனர்)
சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவ படை என்ற இயக்கத்தின் நிறுவுனருமான பி.சிவகாமியின் மகன் சுனந்த் ஆனந்த் (வயது 24) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனந்த் வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் படித்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கே சவுத் கரோலினா மாகாணத்தில் உள்ள ‘கிளெம்சன்’ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பை முடித்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சுனந்த் ஆனந்த், தனது காரில் ஹைவேயில் சென்று கொண்டிருந்த போது, கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், சுனந்த் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சுனந்த் ஆனந்தின் உடல் இந்தியா கொண்டு வரப் படுகிறது. அதற்கு 2 நாட்கள் ஆகும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சுனந்த் ஆனந்த், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் 2-வது மகன். இவரின் அண்ணன் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img