இந்திய சுழலில் ஆஸ்திரேலியா சிக்கும்: பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா

misba-ul-haqஉலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலியா சிக்கும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முத்தரப்பு தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, அனைத்து போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளின் மோதல் ஒரு ‘யுத்தம்’ போன்றே இருக்கும் என்ற பரபரப்பு இப்போது தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியுடன் தொடங்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிஸ்பா உல் ஹக் இது குறித்துக் கூறும்போது, ‘‘சிட்னியில் ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா களமிறங்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் மாற்றங்கள் எதுவும் செய்யலாம்… காரணம் சிட்னியில் சுழற்பந்து வீச்சு பல வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் வகையில் உள்ளது. காலிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணீயின் தஹிர் சிறப்பாக செயல்பட்டார். இலங்கை அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வழிவகுத்தார். எனவே சிட்னியில் நல்ல சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். சிட்னியில் ஆஸ்திரேலியா தடுமாறும். அதேநேரம் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதால் இது இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும்’’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories