தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, எல்லை பகுதியில்
பாகிஸ்தான் சுரங்கம் அமைத்து கொடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை
குற்றம்சாட்டியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை பகுதியில்
அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய ராணுவமும் அதற்கு தாக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, ஜம்மு
காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் சுரங்கம் அமைத்து கொடுத்து உள்ளது.
பாகிஸ்தானின் திட்டத்தை நாங்கள் முறியடிப்போம் என்று இந்திய பாதுகாப்பு படை
கூறி உள்ளது.



