பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்!

nellai-self-help-group-protest
nellai-self-help-group-protest

சிறு, குறு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை மிரட்டியும், நெருக்கடி குடுத்தும் கட்டாய வசூல் செய்வதிலிருந்து கால அவகாசம் வழங்கிடக் கேட்டு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்..

செப்-25 வெள்ளி காலை 9 மணிக்கு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராம சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இக்யூ டாஸ், சூர்யா. போன்ற இன்னும் சில தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அனைத்து பகுதியில் உள்ள பெண்களுக்கும் மகளிர் சுயஉதவிக் குழு உதவி என்ற பெயரில் 10 ஆயிரம் முதல் 30, 50 ஆயிரம் 1 லட்சம் என தன்மைக்கு ஏற்ப சிறு குறு கடன்களை வங்கிகள் அல்லாத பைனான்ஸ் நிதி நிறுவனங்களும், தனியார் வங்கிகளும், கூட்டுறவு கடன் வங்கிகள், அரசு வங்கிகளுக்கு நிகராக போட்டிபோட்டுக் கொண்டு மகளிருக்கு கடன்கள் வழங்கிவந்தன.

இதில் உள்ள பெண்கள் வாரமாகவும், மாதமாகவும் குழுவுக்கு தலைமை மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தனர். பல முறை முழுவதுமான கடன்களை அடைத்த பின்னர் மீண்டும் மீண்டும் கடன் பெற்று முறையாக செலுத்தி வந்துள்ளனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

ஆனால் CoviD – 19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்ப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் நெருக்கடியினால் ஏற்பட்டவருமான இழப்பு காரணமாகவும், உரிய நிவாரணம் வழங்கப் படாததாலும் தற்போதுவரை பீடி தொழில் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிற் சாலைகளில் முழுவதுமாக தொழில் நடக்காத சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதற்கே பெரும் சிரமமான சூழலில் கடன் நிறுவனங்கள் தயவு தாட்சன்யம் இன்றி, ஈவு இரக்கமின்றி ஆட்களை அனுப்பி வீட்டில் இருக்கும் பெண்களிடம் தெருவில் நின்று சத்தம் போடுவதும் கதவை தொடர்ந்து தட்டி தொந்தரவு செய்வதும், அடுத்த முறை கட்டுகிறேன் என்று சொல்லும் தாய்மார்களிடம் நீங்கள் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறீர்களே அதை நீங்கள் நிறுத்தவில்லையே, சோறு தானே சாப்பிடுகிறீர்கள் என்று கேவலமாகப் பேசியும், என்ன செய்வீர்களோ எங்களுக்குத் தெரியாது பணம் கட்டினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகருவோம் என்று கூறி, வீட்டை சுற்றி சுற்றி திரும்ப திரும்ப வருவதும் போவதுமாக உள்ளனர்…

மேலும், இனி நீங்கள் எங்கேயும் கடன்பெற இயலாத வண்ணம் ஆதார் கார்டு, பேன் கார்டுகளில் Cbil Scoreகளை குறைத்து விடுவதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதனால் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

ஒரு கொடூரமான சம்பவமாக, மாரடைப்பால் தனது கணவர் இறந்த அன்று கூட அவரது மனைவி குழு கடனை கட்டிவிட்டு வந்தே தனது துக்கத்தை தொடர்ந்த அவலநிலையும் நடந்தேறியுள்ளது.

இதனால் கடன் பெற்ற பெண்கள் கடன் நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து ஓடி ஒழியும் அவமானகர சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனால் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் அரசு மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கடன்களை செலுத்த 6 மாத காலம் காலநீட்டிப்பு வழங்கிடவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திடவும் குத்துக்கோவில் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதில் அரசு செவிமெடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக தஞ்சம் புகப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories