திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த ஒரு வருடமாக நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிடுவதற்காக முரசொலி அலுவலகத்திற்கு வந்தார்.
தற்போது வழக்கம் போல் தன்னை பார்க்க வருபவர்களை கருணாநிதி சந்திக்க தொடங்கி விட்டாராம்.
அவர் விரைவில் அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.


