நெல்லையில் உள்ள இளையபாரதம் அமைப்பின் நிறுவனர் வெங்கடேஷ் உங்களால் முடியுமா ??? என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி வருகிறார் அதில் இருபக்க கடிதமும் அதை யார் யாருக்கு அனுப்பவேண்டும் எனவும் குறிப்பிட்டு அவர்களின் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளார்
நெல்லையில் நேற்று நடந்த (தற்)கொலை சம்பவத்திற்கு உண்மையாக நீதி வேண்டும் என நினைக்கும் நெஞ்சங்கள் இந்த கடிதத்தை print out எடுத்து அதில் தங்கள் முகவரி எழுதி உள்துறை செயலாளருக்கு அனுப்புங்கள்.
ஒரு சம்பவம் சார்ந்த புகார்கள் ஆயிரக்கணக்கில் சென்றால் கண்டிப்பாக நடவடிக்கைகள் இருக்கும்.
முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் மட்டுமே புலம்பாமல் தைரியமாக புகார் அனுப்புங்கள். நாம் கொடுக்கும் இந்த அழுத்தம் ஆட்சியாளரை நடுநடுங்க செய்யும். அப்போதுதான் பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கு வரும்….
மேலும் ஈ_மெயில் மூலமும் புகார் அனுப்புங்கள் !!!


