காவல் நிலைய சித்ரவதை குற்றச்சாட்டில் சிக்கிய போலீசாருக்கு ஆயுள் தண்டனை : சட்ட கமிஷன் பரிந்துரை

காவல் நிலையத்தில் லாக் அப்பில் அடைத்துள்ளவர்களை அடித்து சித்ரவதை செய்வது, மற்றும் இதன் காரணமாக ஏற்படும் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் காவல் நிலைய லாக் அப் மரணங்கள் நடப்பதாக பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் சராசரியாக 98 பேர் காவல் நிலைய லாக் அப்பில் மரணம் அடைகின்றனர். காவல் நிலைய லாக் அப்பில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான சித்ரவதை மற்றும் மரண ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் அண்மையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான சித்ரவதை மற்றும் மரணம் குறித்து விசாரித்துஅறிக்கை அளிக்க நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்துள்ள பரிந்துரையை சட்ட அமைச்சகத்தில் சட்ட கமிஷன் தாக்கல் செய்திருந்தது. அதில் காவல் நிலையங்களில் லாக் அப் சித்ரவதை மற்றும் மரணம் தொடர்பான ஆதாரங்கள் சிக்கி அதன் பேரில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து லாக் அப் மரணங்கள் மற்றும் சித்ரவதைகளை தடுப்பது தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதாவை விரைவில் சட்ட அமைச்சகம் தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை காவல் நிலைய லாக் அப்பில் 15 ஆயிரத்து 300 பேர் இறந்துள்ளனர். இதில் 50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் லாக் அப் மரணங்கள் என வழக்கு பதிவாகியுள்ளது. லாக் அப் சித்ரவதை மற்றும் மரணங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
இந்தியாவில் லாக் அப் மரணங்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு 15 பேர் இறந்துள்ளனர். 2012ம் ஆண்டு 7 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு 7 பேர் மட்டுமே லாக்அப்பில் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories