கரூர் அருகே … காங்., எம்.பி ஜோதிமணி பொதுமக்களால் விரட்டியடிப்பு!

karur-mp-jothimani
karur-mp-jothimani

கரூர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூரை அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிப்கோ நிறுவனம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தச் சென்றார்.

அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் வந்து இந்த சிப்கோ நிறுவனம் வந்தால் 5000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால் ஜோதிமணி அதற்கு செவி சாய்க்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும், வெற்றி பெற்றதற்காக தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிக்க வரவில்லை; ஆனால் தற்போது பொய்யாக போராட்டம் செய்ய வருகிறீர்களே என்று கேட்டனர்.

ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் உடன் வந்த திமுகவினர் பொதுமக்களை தள்ளி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கேள்வி எழுப்புவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், ஜோதிமணி மக்களுக்கு பதில் கொடுக்காமல் இருக்க, ஜோதிமணியை பத்திரமாக மீட்ட அவரது ஆதரவாளர்கள், அவரை அவரது கார் நோக்கி வேகமாகச் செல்ல வைத்தனர். வேகமாகச் சென்ற ஜோதிமணி, காரில் அமர்ந்து விருட்டென சென்று விட்டார்.

தொகுதி வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்படும் எம்.பி.,யை தேர்வு செய்ததற்காக தாங்கள் வெட்கப் படுவதாக தொகுதி மக்கள் அப்போது தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories