சென்னை: கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனே விடுவிக்கப்படாவிட்டால், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கும். இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், மீனவர்களும் திங்கள்கிழமை காலை சென்னை வந்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மீனவர்களை விடுவித்து சுமூகமான சூழலில் பேச்சினை நடத்த வேண்டும் என தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் திங்கள்கிழமை மாலை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இலங்கைத் தரப்பில் மீன்வளத் துறை செயலாளர் நிமல் ஹெட்ரிராச்சி, இயக்குநர் ஜெனரல் எம்.சி.எல். பெர்ணாண்டோ, இயக்குநர் டி.எஸ்.நந்தாசேனா உள்ளிட்ட 10 பேர் அடங்கிய அதிகாரிகளைக் கொண்ட குழு பார்வையாளர்களாகவும், டி.சதாசிவம், ஜஸ்டின் ஜோய்சா, ஜி.வி.எம்.ஜெரால்டு, என்.பொன்னம்பலம், பி.செந்தில் நாதன், ஜெ.பிரான்ஸிஸ் ஆகியோர் அடங்கிய 10 மீனவர்களைக் கொண்ட குழுவும் சென்னையில் தங்கியுள்ளன. தமிழகத்தின் சார்பில் 13 மீனவர்கள் பங்கேற்கின்றனர்.
Hot this week
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக

Topics
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

