54 மீனவர்கள் கைது; மீனவர் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கையாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. இந்தியப் பிரதமர் இலங்கை சென்று வந்த பிறகும் இதற்கு தீர்வு கிட்டப்படும் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் மீனவர்களின் வருமானத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை மத்திய அரசுக்கு, தமிழக அரசு எடுத்துரைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை கண்டிப்பதோடு, ஒரு தீர்க்கமான நல்ல முடிவு தமிழக மீனவர்களுக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும். ஏற்கனவே 2 முறை மீனவப் பிரதிநிதிகளோடு நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு 3 ஆவது முறையாக நடக்க இருந்த பேச்சு வார்த்தை இன்று 24-03-2015 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே இன்று நடைபெறும் மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக இன்றைக்குள் விடுவிக்க வேண்டும். மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே நடக்கின்ற பேச்சு வார்த்தையும் நல்ல முறையில் நடந்து அனைத்து மீனவர்கள் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை அரசால் பிரச்சனைகள் இன்றி தொடர ஒரு நிரந்தர, சுமூக, நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories