சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கையாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. இந்தியப் பிரதமர் இலங்கை சென்று வந்த பிறகும் இதற்கு தீர்வு கிட்டப்படும் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் மீனவர்களின் வருமானத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை மத்திய அரசுக்கு, தமிழக அரசு எடுத்துரைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை கண்டிப்பதோடு, ஒரு தீர்க்கமான நல்ல முடிவு தமிழக மீனவர்களுக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும். ஏற்கனவே 2 முறை மீனவப் பிரதிநிதிகளோடு நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு 3 ஆவது முறையாக நடக்க இருந்த பேச்சு வார்த்தை இன்று 24-03-2015 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே இன்று நடைபெறும் மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக இன்றைக்குள் விடுவிக்க வேண்டும். மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே நடக்கின்ற பேச்சு வார்த்தையும் நல்ல முறையில் நடந்து அனைத்து மீனவர்கள் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை அரசால் பிரச்சனைகள் இன்றி தொடர ஒரு நிரந்தர, சுமூக, நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Hot this week
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக

Topics
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
Entertainment News
Previous article

