21-03-2023 8:58 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்!

    To Read in other Indian Languages…

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்!

    thiruparankundram-hindumunnani-protest
    thiruparankundram-hindumunnani-protest

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையில் 3 காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில் 12 ஆய்வாளர்கள் 25 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 250 போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    thiruparankundram
    thiruparankundram

    இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் 100 பெண்கள் 2 ள் பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

    மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தார்.

    .மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர் .

    thiruparankundram-hill1
    thiruparankundram-hill1

    ஆனால் காவல்துறை மலைமேல் உள்ள சிக்கந்தர் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி பல வருடங்களாக திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர் .

    இது ஆகம விதிகளுக்கு முரணானது என கூறி இந்து முன்னணியினர். எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    thiruparankundram-hill2
    thiruparankundram-hill2

    இதனை தொடர்ந்து கார்த்திகை தீபம் மலைமேல் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஏற்ற இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் அதனை தொடர்ந்து இன்று இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை தலைமையில் மூன்று உதவி ஆணையர்கள் 12 ஆய்வாளர்கள், 25 சார்பு ஆய்வாளர்கள், உள்ளிட்ட 250 போலீசார் அசம்பாவிதம் ஏற்பாடாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வஜ்ரா வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    10 − 10 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...