21-03-2023 5:11 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சுபாஷிதம்: முன்யோசனை, முழு யோசனை!

    To Read in other Indian Languages…

    சுபாஷிதம்: முன்யோசனை, முழு யோசனை!

    subhashitam
    subhashitam

    சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
    வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

    தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    45. முன்யோசனை, முழு யோசனை!

    செய்யுள்:

    சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா !

    ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே !!

    — ஆர்ய தர்மம்

    பொருள்:

    ஒரு பணியில் எதிர்ப்படக்கூடிய தடைகளை முதலிலேயே யூகித்து அவற்றை எவ்வாறு கடப்பது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும்போது அணைப்பதற்கான நீருக்காக கிணறு தோண்டுவது அறிவுள்ள செயல் அல்ல.

    விளக்கம்:

    முன்யோசனை, முழு யோசனை என்பவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் சுலோகம் இது. தனிமனிதனுக்கு ஆனாலும் அமைப்புகளுக்கு ஆனாலும் இத்தகு ஆலோசனை ஊக்கமளிக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

    மின்சாரம் தடைபடும் என்று எதிர்பார்த்தால் முன்பாகவே நெருப்புப் பெட்டி, மெழுகுவர்த்தியை தயாராக வைத்திருப்போம். மழைநாளில் பாதுகாப்பாக குடை எடுத்துச் செல்வோம். இவை முன் யோசனைக்கு சில ஆரம்ப உதாரணங்கள்.

    ஏதாவது மிகப்பெரிய பணியைத் தொடங்கும் போது முழு யோசனை செய்து கொள்ள வேண்டும். செய்ய இருக்கும் வேலைகளின் பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்படும் அபாயங்களை யோசித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.

    மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போதும்,  நிர்வாகிகள் அரங்குகளை ஏற்பாடு செய்யும் போதும்,  திருமணம் போன்ற சுப காரியங்களிலும் இந்த முன் யோசனை மிகவும் அவசியம்.

    விடுதலைக்குப் பிறகு முன்யோசனை இல்லாத நம் தலைவர்களில் சிலர் (நேரு போன்றோர்) நமக்கு (ஆர்மி) படைவீரர்களின் தேவை என்ன என்று எண்ணினார்கள்.  நமக்கு பகை நாடுகளே இல்லை என்ற பிரமையில் இருந்தார்கள். அவர்களின் பிரமையையும் கற்பனையையும் உடைத்தெறியும் வண்ணம் 1948 லேயே பாகிஸ்தானும், 1962ல் சைனாவும் நம்மைத் தாக்கின. சைனா எப்போதிருந்தோ நம்மீது போர் யத்தனங்களைச் செய்து வந்த விஷயத்தை நம் தலைவர்கள் உணரத் தவறினார்கள். நம்மிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் நாம் நஷ்டம் அடைந்தோம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen + seven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,629FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...