சுபாஷிதம்: முன்யோசனை, முழு யோசனை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

45. முன்யோசனை, முழு யோசனை!

செய்யுள்:

சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா !

ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே !!

— ஆர்ய தர்மம்

பொருள்:

ஒரு பணியில் எதிர்ப்படக்கூடிய தடைகளை முதலிலேயே யூகித்து அவற்றை எவ்வாறு கடப்பது என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும். வீடு பற்றி எரியும்போது அணைப்பதற்கான நீருக்காக கிணறு தோண்டுவது அறிவுள்ள செயல் அல்ல.

விளக்கம்:

முன்யோசனை, முழு யோசனை என்பவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் சுலோகம் இது. தனிமனிதனுக்கு ஆனாலும் அமைப்புகளுக்கு ஆனாலும் இத்தகு ஆலோசனை ஊக்கமளிக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

மின்சாரம் தடைபடும் என்று எதிர்பார்த்தால் முன்பாகவே நெருப்புப் பெட்டி, மெழுகுவர்த்தியை தயாராக வைத்திருப்போம். மழைநாளில் பாதுகாப்பாக குடை எடுத்துச் செல்வோம். இவை முன் யோசனைக்கு சில ஆரம்ப உதாரணங்கள்.

ஏதாவது மிகப்பெரிய பணியைத் தொடங்கும் போது முழு யோசனை செய்து கொள்ள வேண்டும். செய்ய இருக்கும் வேலைகளின் பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்படும் அபாயங்களை யோசித்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.

மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும்போதும்,  நிர்வாகிகள் அரங்குகளை ஏற்பாடு செய்யும் போதும்,  திருமணம் போன்ற சுப காரியங்களிலும் இந்த முன் யோசனை மிகவும் அவசியம்.

விடுதலைக்குப் பிறகு முன்யோசனை இல்லாத நம் தலைவர்களில் சிலர் (நேரு போன்றோர்) நமக்கு (ஆர்மி) படைவீரர்களின் தேவை என்ன என்று எண்ணினார்கள்.  நமக்கு பகை நாடுகளே இல்லை என்ற பிரமையில் இருந்தார்கள். அவர்களின் பிரமையையும் கற்பனையையும் உடைத்தெறியும் வண்ணம் 1948 லேயே பாகிஸ்தானும், 1962ல் சைனாவும் நம்மைத் தாக்கின. சைனா எப்போதிருந்தோ நம்மீது போர் யத்தனங்களைச் செய்து வந்த விஷயத்தை நம் தலைவர்கள் உணரத் தவறினார்கள். நம்மிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் நாம் நஷ்டம் அடைந்தோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories