ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை சொல்ல முடியாது!

tamilaruvi
tamilaruvi

ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது! – என்று கூறினார் தமிழருவி மணியன்.

கட்சி தொடங்கிய பிறகு சர்ச்சைகளை சந்திப்பார்கள் சிலர். கட்சி தொடங்குவதற்காகவே சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1996இல் அவர் அரசியல் வாய்ஸ் கொடுத்து, தானும் அரசியல் ஆர்வம் உள்ளவர் என்று காட்டிக் கொண்டார். அவ்வாறு ரஜினி வாய்ஸ் கொடுத்ததன் வெள்ளிவிழா ஆண்டு இது.

கடந்த 25 வருடங்களாக வெறும் வாய்ஸ் மட்டுமே கொடுத்து, ஊடகங்களின் நாய்ஸ்க்கு வழிவகுத்துவிட்ட ரஜினிகாந்த், இதுவரையிலும் மக்களின் நம்பிக்கையை மட்டுமே மூலமாகக் கொண்டு அரசியல் வெள்ளிவிழா கண்டிருக்கிறார்.

தற்போது 2021 தேர்தல் வரும் நிலையில், களம் சூடுபிடித்துள்ளது. இப்போதும் ரஜினி வாய்ஸிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால், பொறுமை இழந்த பலர், எவ்வாறேனும் அவரை களத்திற்குள் இழுக்க வேண்டும் என்று போட்டி போட்டு வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான தமிழருவி மணியன் நேற்று ரஜினியை சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கும் தமிழக மக்களின் நலனுக்காகவும் நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். விரைவில், கொரோனா தடுப்பு மருந்து வந்து விடும்; நோய் தாக்கம் குறைந்து விடும். உங்களுடைய உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் கட்சி தொடங்குவது பற்றி சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினாராம்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், ரஜினி தன் உடல் நிலை குறித்து, அவர் வெளிப்படையாக சொல்லி விட்டார். தன் உடல் நிலை குறித்து தமிழக மக்களிடம் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிக்கு எள்ளளவும் கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

தமிழக மக்களின் நலனுக்காக அவர் என்ன நினைக்கிறாரோ, அதை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி தன் உடல் நலனில் உள்ள பிரச்னைகளையும் அவர் கூறியிருக்கிறார்.

நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை, வெளியே சொல்ல முடியாது. கட்சி துவக்குவாரா, இல்லையா என்பதை ரஜினி சொன்னால் தான் தெரியும்.

நான் எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கவில்லை. ரஜினி மீது எனக்கு அதிக அக்கறை உண்டு என்பதால் உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்; அது தான் முக்கியம் என்று கூறினேன் என்று தெரிவித்தார் தமிழருவி மணியன்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories