December 5, 2025, 2:59 PM
27.9 C
Chennai

தமிழகத்தில் 76 குடிநீர் திட்டப் பணிகள்: தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

edappadi-in-madurai-fun1
edappadi-in-madurai-fun1

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.1295.76 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து மதுரைக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்!

அதனை தொடர்ந்து 30 கோடி மதிப்பில் புதிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

edappadi-palanisami-in-sivagangai
edappadi-palanisami-in-sivagangai

தமிழகத்தில், மத்திய, மாநில அரசின் நிதியான ரூ. 3650 கோடி மதிப்பீட்டில் 76 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்… தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி!

மதுரையில் 1295.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியது:

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமணை பணிகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணியின் போது, கீழ்பாலம் அமைக்கப்படும். மதுரையை பொறுத்த வரை பல்வேறு உயர் மட்டப்பாலம், பறக்கும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது.

அரசு பள்ளிகளின் மாணவர்களுக்காக 7.5. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை பேணி காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்படுவதாகவும், 2023…ல் மதுரை நகரில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

edappadi-in-madurai-fun
edappadi-in-madurai-fun

அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் முழுதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தால் 7,600 எம்.எல்.டி குடிநீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய திட்டங்களால் குடிநீர் பிரச்சினைகள் வராது.

மதுரையில் 974 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மதுரை சர்வதேச விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக தற்போதைய நான்கு வழிச்சாலை விமான நிலைய ஒடு தளத்திற்கு கீழே கீழ்பால சாலையாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

எதிர்கட்சிகளின் பார்வையில் கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர்களுக்கு தமிழக அரசை பாராட்ட எதிர்கட்சிகளுக்கு மனமில்லை, தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறோம், துணை முதல்வர் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரங்களை பெருக்கி தருகிறார், ஒவ்வொரு அரசுத்துறையும் முத்திரை பதித்து வருகிறது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படும்.

குடிமரமத்து திட்டத்தால் மழை நீர் ஒன்று கூட வீணாகமல் சேமிக்கப்பட்டு வருகிறது. திட்டங்களை பார்க்காமல் தேர்தலுக்காக ஸ்டாலின் தினமும் அரசை வசைபாடி வருகிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 313 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர் என்று பேசினார்

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஜெயலலிதாவில் கனவு. முதல்வர் மீது ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி செய்கிறார். பூட்டிய அறைக்குள் இருந்து பேசுகிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையை சட்ட ரீதியாக மீட்டார். திமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கருணாநிதி முறையாக கையாலவில்லை, ஜெயலலிதா 7 ஆண்டுகள் போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழிலில் வெளியிட்டார்.

மீத்தேன் திட்டத்திற்கு கையெப்பம் மிட்டவர் ஸ்டாலின்.ஸ்டாலின் போலி நாடகம் மக்கள் மத்தியில் பலிக்காது. ஸ்டாலின் கனவு பலிக்காது. 2021 ல் அதிமுக அரசு தான் வெற்றி பெறும் என்று பேசினார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் வரவேற்றார்.
அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, திண்டுக்கல் சீ. சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், நீதிபதி, சரவணன், பெரியபுள்ளான், வே. ராசன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், பிஆர்ஓ.க்கள் நவீன்பாண்டியன், சித்திரவேலு, சாலிதளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories