ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்படாது!

கோயமுத்தூர்: வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு-கேரளா லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, கோவை லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோவையை அடுத்த வாளையாறு சோதனைச் சாவடி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேரளாவில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் சோதனை என்ற பெயரில் குறைந்தது 20 மணி நேரம் வரை லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதைக் கண்டித்து கடந்த 22-7-2013 அன்று கேரளாவுக்கு லாரிகளை இயக்காமல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினோம். அப்போது அந்த மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி எங்களை அழைத்து பாலக்காட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாங்கள் வாளையாறு சோதனை சாவடியில் வெளிப்படையாக சரக்குகளை கண்டறிய ஸ்கேன் மற்றும் கேமராக்கள் பொருத்த வேண்டும், இரும்பு, ஸ்டீல் மற்றும் காய்கறி போன்ற சரக்குகளை எளிதாக சோதனை செய்ய சிறப்பு வசதி செய்ய வேண்டும், பல கிலோ மீட்டர் தூரம் லாரிகளை ஓட்டி வரும் லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உம்மன் சாண்டி உறுதியளித்தார். நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம்.. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories