கோயமுத்தூர்: வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு-கேரளா லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, கோவை லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோவையை அடுத்த வாளையாறு சோதனைச் சாவடி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேரளாவில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் சோதனை என்ற பெயரில் குறைந்தது 20 மணி நேரம் வரை லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதைக் கண்டித்து கடந்த 22-7-2013 அன்று கேரளாவுக்கு லாரிகளை இயக்காமல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினோம். அப்போது அந்த மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி எங்களை அழைத்து பாலக்காட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாங்கள் வாளையாறு சோதனை சாவடியில் வெளிப்படையாக சரக்குகளை கண்டறிய ஸ்கேன் மற்றும் கேமராக்கள் பொருத்த வேண்டும், இரும்பு, ஸ்டீல் மற்றும் காய்கறி போன்ற சரக்குகளை எளிதாக சோதனை செய்ய சிறப்பு வசதி செய்ய வேண்டும், பல கிலோ மீட்டர் தூரம் லாரிகளை ஓட்டி வரும் லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உம்மன் சாண்டி உறுதியளித்தார். நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம்.. என்று கூறினார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
Entertainment News
Previous article
Next article

