புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர்களை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிரப்பி செய்தி வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, குஜராத் கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் 10 பேர், மும்பையின் முக்கிய பகுதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 600 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்த என்கவுன்டர் சம்பவம் இரண்டு நாட்களுக்கு மேலாக எல்லா டி.வி. சானல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் இதனைப் பார்த்த மக்கள் மனதில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. மும்பையின், தாஜ்மகால் பேலஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் பிணமாக கிடந்தவர்களின் ரத்தம் உறைய வைத்த காட்சிகளை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிபரப்பி நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு பிடித்து உயிருடன் பிடிக்க உதவிகரமாக அமைந்ததாக அப்போது கூறப்பட்டாலும் ராணுவ அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இது போன்ற லைவ் ரிப்போர்ட்டுகளை டி.வி.சானல்கள் ஒளிபரப்ப கட்டுப்பாட்டு விதிப்பது குறித்து ஆலோசித்தது. இதையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில், தகவல் மற்றும் ஒளிரப்புத்துறை புதிய சட்டதிருத்தம் கொண்டுவந்தது. இது குறித்து மத்திய தகவல் ஒளிரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப்படையினர், ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்து பணியில் ஈடுபட்டால். அதனை டி.வி.சானல்கள் லைவ் ரிப்போர்ட் என்ற பெயரில், நேரடியாக ஒளிபரப்ப கூடாது. 1994-ம் ஆண்டு கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டத்தின் படி புதிய சட்டவிதிகளை அனைத்து கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

