என்கவுண்டர்களின் நேரடி ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை

Published:

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர்களை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிரப்பி செய்தி வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, குஜராத் கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் 10 பேர், மும்பையின் முக்கிய பகுதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 600 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்த என்கவுன்டர் சம்பவம் இரண்டு நாட்களுக்கு மேலாக எல்லா டி.வி. சானல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் இதனைப் பார்த்த மக்கள் மனதில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. மும்பையின், தாஜ்மகால் பேலஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் பிணமாக கிடந்தவர்களின் ரத்தம் உறைய வைத்த காட்சிகளை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிபரப்பி நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு பிடித்து உயிருடன் பிடிக்க உதவிகரமாக அமைந்ததாக அப்போது கூறப்பட்டாலும் ராணுவ அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இது போன்ற லைவ் ரிப்போர்ட்டுகளை டி.வி.சானல்கள் ஒளிபரப்ப கட்டுப்பாட்டு விதிப்பது குறித்து ஆலோசித்தது. இதையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில், தகவல் மற்றும் ஒளிரப்புத்துறை புதிய சட்டதிருத்தம் கொண்டுவந்தது. இது குறித்து மத்திய தகவல் ஒளிரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப்படையினர், ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்து பணியில் ஈடுபட்டால். அதனை டி.வி.சானல்கள் லைவ் ரிப்போர்ட் என்ற பெயரில், நேரடியாக ஒளிபரப்ப கூடாது. 1994-ம் ஆண்டு கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டத்தின் படி புதிய சட்டவிதிகளை அனைத்து கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img