ரஜினியின் மக்கள் சேவையில் என்றும் உடன் இருப்பேன்: அர்ஜுனமூர்த்தி!

rajini-and-arjun
rajini-and-arjun

தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தீவிர கட்சி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும், தனிக்கட்சி தொடங்க வாய்ப்பில்லை, மன்னியுங்கள் என்றும் ரஜினி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அவருக்காக கட்சிப் பணி ஆற்றலாம் என்று ரஜினியால் நியமிக்கப் பட்ட தமிழருவி மணியன் தனது அறிக்கையை இன்று காலை வெளியிட்டார். அதில், தனது இறுதிக் காலம் வரை இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்னொரு நபரான அர்ஜுன மூர்த்தியும் இன்று பிற்பகல் 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என்று குறிப்பிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று ரஜினி எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்; யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார் என்றும், ரஜினியின் மக்கள் சேவையில் உடனிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள் என்றார்.

இந்நிலையில், இது குறித்து அர்ஜுன மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

ரா அர்ஜுன மூர்த்தியாகிய என்னை மதிப்புக்குரிய திரு ரஜினிகாந்த் அவர்கள் மக்களுக்கு அறிமுகம் செய்யும்போது சொன்னதுபோலவே நான் மக்களுக்கு சேவை செய்வேன். அது மக்களை சார்ந்து இருக்கும். அவர் இதுவரையில் யாரையும் ஏமாற்றியது இல்லை.

அவரின் உடல்நிலை குறித்து யோசிக்கிறார் இருந்தாலும் அவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்பதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். அவரின் ஆசைப்படி மக்களுக்கு நல்லது கிடைக்க நான் பாடுபடுவேன். நான் எந்த இடத்திலும் எந்த செயலிலும் மிக நேர்த்தியாக செயல்படுவேன்.

என்னை பொருத்தவரை இம்முறை ஒரு மாற்று அரசியல் வர வேண்டும். மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்படி ஒரு செயலுக்கு திரு ரஜினிகாந்த் அவர்கள் என்னை முன்னிறுத்தி உலகிற்கு சொன்னார்கள். ஆனால் தற்போது உடல் நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன காரணத்தால் கட்சியின் வேலைகள் செய்ய இயலாத காரணத்தால் அவர் அப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

மற்றபடி ஒரு நல்லாட்சி வேண்டும் என்பதில் அவர் மக்களில் ஒருவராக துணை நிற்பார். நான் அவருடன் என்றும் தொடர்ந்து செயல்படவே ஆசைப்படுகிறேன். மற்றவை கடவுளின் சித்தம் என்று ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டார்

https://twitter.com/RaArjunamurthy/status/1344273454791491586

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories