December 6, 2025, 4:55 AM
24.9 C
Chennai

மருத்துவரை நூதன முறையில் ஏமாற்றிய வக்கீல்!

arul-murugan
arul-murugan

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ராமதாஸ். இவர் அப்பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தான் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன். அதேபோல், மற்றொரு மருத்துவமனையை தொடங்க நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தை வாங்கி மருத்துவமனை அமைக்கும் பணியை தொடங்கினேன்.

அப்போது, “தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அருள் முருகன் என்பவர், வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினால் ரூ.50 கோடியை கடனாக பெற்று தருவதாக கூறினார்

இதற்காக அருள்முருகன் கமிஷன் அடிப்படையில் ஒன்றரை கோடி தரவேண்டும் என கூறினார்.

இதனை தொடர்ந்து, அருள்முருகன் என்னிடம் இருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருள் முருகனின் வீட்டிற்கு சென்றேன். ஆனால், அங்கே அவர் அளித்த முகவரியில் அருள் முருகன் என்ற நபர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், அவர் வழக்கறிஞர் இல்லை என்றும் பண மோசடி செய்ததையும் அறிந்தேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான அருள் முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைத்து அருள் முருகனை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் போலி வழக்கறிஞர் என்பதும் அவர் கொடுத்த முகவரிகள் அனைத்தும் போலியானது என்பதும் தெரியவந்தது.

பின்னர் அருள் முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காலான்கரை என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய போலிஸ் நிலையங்களில் கொலை வழக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட அவர் தனது தோற்றத்தை பல்வேறு விதமான வகையில் மாற்றியுள்ளார். மேலும், போலியாக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து இருந்ததும் தெரியவந்துள்ளது. போலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories