மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரம்! மேலும் விலை குறைய வாய்ப்பு!

madurai-flower-market1
madurai-flower-market1

மதுரை மல்லிகையின் விலை ஒரு கிலோ ரூபாய் 3 ஆயிரம். பிற மலர்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகேயுள்ள மலர் சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் பெருங்குடி, வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வருகின்றன.

குறிப்பாக மதுரை மல்லிகை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50 டன் மலர்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்ததால் மல்லிகை வரத்து குறைவாக இருந்தது இதன் காரணமாக கிலோ ரூபாய் 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் பிற பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந் நிலையில் , கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகை இன்றைய விலை ரூபாய் 3 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.1200, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

madurai-flower-market
madurai-flower-market

தற்போது மழைப் பொழிவு குறைந்து வெயில் அடித்த தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் மல்லிகையின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும். பூக்களின் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories