December 6, 2025, 4:02 AM
24.9 C
Chennai

மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரம்! மேலும் விலை குறைய வாய்ப்பு!

madurai-flower-market1
madurai-flower-market1

மதுரை மல்லிகையின் விலை ஒரு கிலோ ரூபாய் 3 ஆயிரம். பிற மலர்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகேயுள்ள மலர் சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் பெருங்குடி, வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வருகின்றன.

குறிப்பாக மதுரை மல்லிகை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50 டன் மலர்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்ததால் மல்லிகை வரத்து குறைவாக இருந்தது இதன் காரணமாக கிலோ ரூபாய் 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் பிற பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந் நிலையில் , கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகை இன்றைய விலை ரூபாய் 3 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.1200, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

madurai-flower-market
madurai-flower-market

தற்போது மழைப் பொழிவு குறைந்து வெயில் அடித்த தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் மல்லிகையின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும். பூக்களின் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories