February 8, 2025, 8:59 PM
28.2 C
Chennai

போலீஸ் வேடமணிந்து பணம் கொள்ளை! விரைந்து பிடித்த தனிப்படை!

Kerala-robbery
Kerala-robbery

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் கேரள நகை வியாபாரியின் காரை மறித்து 80 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த 15 மணி நேரத்தில் 5 பேரையும் கைது செய்து, பணத்தையும் மீட்டு அதிரடி காட்டியுள்ளனர்.

கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76லட்சத்தி 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டார்.

இந்த நிலையில் தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது, மற்றொரு சொகுசு காரில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அவரது காரை சினிமா பட பாணியில் வழிமறித்து அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதனால் செயவதறியாது திகைத்த நகைக்கடை உரிமையாளர் சம்பத், தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காரை வழிமறித்து ரூ.76.40 லட்சம் கொள்ளையடிக்க போலீஸ் வேடமணிந்து வந்த 4-மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் நான்கு தனி படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில் கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர், திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5-பேரை அதிரடியாக கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலீஸ் உடை மற்றும் 10-செல்போன்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 15-மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் பாராட்டினார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories