
தமிழகம் முழுவதிலும் ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும்.
கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் ஜனவரி 31ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.