மாமியார் மருமகள் சண்டை! குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை!

deadbody
deadbody

ஆத்தூர் அருகே சொத்து தகராறில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புங்கவாடி கிழக்கு காட்டுக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். நெல் அறுவடை இயந்திர ஓட்டுனர். இவருக்கு, சத்யா என்ற மனைவியும், அபினயா (12) மற்றும் சங்கீத்(11) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன் தனது தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இதனிடையே வேல்முருகன் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது தாயார் தனலட்சுமி சொத்தில் பங்கு தர முடியாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக தனலட்சுமி மற்றும் சத்யாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, சத்யாவை, தனலெட்சுமி மற்றும் அவரது 2-வது மருமகள் ராஜாமணி ஆகியோர் தகாத வார்த்தைகளை திட்டி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் மற்றும் சத்யா தம்பதியினர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளனர். இதற்காக நேற்றிரவு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மஞ்சினி பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு தம்பதியினர் இருவரும் விஷத்தை குடித்துவிட்டு, குழந்தைகளும் ஊற்றி கொலை செய்ய முயன்றனர். இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து குழந்தைகள் போன் மூலம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மயங்கி கிடந்த வேல்முருகன் மற்றும் குழந்தைகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வேல்முருகன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories