February 22, 2026, 7:53 PM
29 C
Chennai

முகாமிலிருந்து கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜெயமால்யதா!

jeyamalyatha 1 - 2026

பாகன்களை பிரிந்த சோகத்தில் வாடிய ஜெயமால்யதா யானை பாகன்களுடன் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானை சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி உள்ளது.

இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா யானையைப் பாகன் ராஜா மற்றும் உதவி பாகன் பிரசாத் ஆகியோர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்தக் காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பாகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

elephant - 2026

இந்நிலையில் ஜெயமால்யதா யானை பாகன்களை பிரிந்த சோகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளாமல், உணவு சாப்பிடாமல் இருந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி மருத்துவ குழுவினர் யானையை பரிசோதித்து பார்த்தபோது, பாகன்கள் இல்லாததால் யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது மற்ற யானைகள் மற்றும் அலுவலர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் யானையை கோவிலுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் நீதிமன்றம் பாகன்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் 2 பாகங்களையும் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் யானை ஜெயமால்யதா பாகன்களை பார்த்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளது. மேலும் யானையின் துதிக்கையை பாகன்கள் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அதன்பின் யானை உணவு உண்ட பிறகு லாரியில் ஏற்றப்பட்டதை கண்ட புதுவை மணக்குளவிநாயகர் கோவில் யானை லட்சுமி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு 13 ஆண்டுகால புத்துணர்வு முகாமில் யானையை திருப்பி அனுப்புவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories